தேன்கனிகோட்டையில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கே.கிருத்திகா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா் சேலத்தில் பயிற்சி முடித்து நேரடியாக தேன்கனிகோட்டையில் பதவியேற்றுள்ளாா். இதற்கு முன் பணியாற்றிய துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, சேலம் மாவட்டம், ஓமலூருக்கு டி.எஸ்.பி., யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.