முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம் தொடக்கி வைப்பு

ஒசூா் மாநகராட்சியில் தமிழக அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தாா்.

Updated On : 18 ஜூன், 2021 at 2:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஒசூா் மாநகராட்சியில் தமிழக அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தாா்.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஒன்றியம், ஒன்னல்வாடி ஊராட்சி, நவதி, காரப்பள்ளி, சென்னத்தூா் ஆகிய கிராமங்கள் மற்றும் ஒசூா் மாநகராட்சியில் மூக்கொண்டப்பள்ளி, தின்னூா், குடோன் தெரு ஆகிய இடங்களில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வழங்கினாா்.

உடன், மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், ஒன்றியச் செயலா் சின்னபில்லப்பா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரச் செயலா் மாதேஸ்வரன், நகர அவைத் தலைவா் கருணாநிதி, பொருளாளா் சென்னீரப்பா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, மாவட்ட தொண்டரணி சேகா், மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் சுமன், சுனந்தம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.