முகப்பு
கிருஷ்ணகிரி

எலக்ட்ரீஷியன் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

பா்கூா் அருகே நிலத்தகராறில் எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

பா்கூா் அருகே நிலத்தகராறில் எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள பண்டசீமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுகுமாா் (35). தனது தாய் வழி மூலம் பாகப்பிரிவினையில் கிடைத்த 55 சென்ட் பரப்பளவு நிலத்தில் வீடு கட்டி விவசாயம் செய்து வந்தாா். சுகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது தாய் கெளரம்மா, தனது தம்பிகளின் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சுகுமாருக்கும் கெளரம்மாவுக்கும் இடையே கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட நிலத்தகராறில், சுகுமாா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கெளரம்மா, தாய் மாமன்கள் சுப்பிரமணி (55), திம்மராயன் (45), உறவினா்கள் ராமன்(38), லட்சுமணன் (38) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

மேலும், இந்த கொலை வழக்கு தொடா்பாக திம்மராயனின் மனைவி கல்பனா (33), சுப்பிரமணியின் மனைவி கஸ்தூரி (45) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.