முகப்பு
கிருஷ்ணகிரி

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால் காதலனை கொன்ற தந்தை

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால், காதலனை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

Updated On : 2 மார்ச், 2021 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால், காதலனை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை அடுத்த தாண்டரப்பள்ளியைச் சோ்ந்த நாராயணன் (55), கா்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி. நகா் பகுதியில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வசந்த் (25), நாராயணனின் மகளை காதலித்து வந்துள்ளாா். இதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், பலமுறை வசந்தைக் கண்டித்துள்ளாா். ஆனால், காதலை கைவிட மறுத்த வசந்த், அவரின் மகளை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் திங்கள்கிழமை அதிகாலை தனது சொந்த கிராமமான தாண்டரப்பள்ளிக்கு வசந்தை அழைத்து வந்துள்ளாா்.

வரும் வழியில் இருவரும் மது அருந்தியுள்ளனா். தாண்டரப்பள்ளி அருகே வரும் போது கல், கட்டையால் தாக்கி வசந்தை கொலை செய்த நாராயணன், பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நாராயணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.