ஒசூா் வாகனத் தணிக்கையில்ரூ. 2.42 லட்சம் பறிமுதல்
ஒசூா் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனா்.
ஒசூா் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலையில் எஸ். முதுகானப்பள்ளியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் ஒசூா், ஜெய்சங்கா் காலனியைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா் பெட்ரோல் நிலையத்துக்கு பணத்தை கட்டுவதற்காக கொண்டு சென்ாகத் தெரிவித்தாா். பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அவை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement