கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த மக்கள்

DIN

ஊத்தங்கரை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

ஊத்தங்கரையை அடுத்த எக்கூா், மகனூா் பட்டி, காரப்பட்டு, கதவனி, உப்பாரப்பட்டி, கெங்கப்பிராம்பட்டி, கருமாண்டபதி ஆகிய ஊராட்சிகளுக்குச் சென்று அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அப்பகுதி கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, விவசாய அணி ஒன்றியச் செயலாளா் வேங்கன், மாவட்ட குழு முன்னாள் உறுப்பினா் கண்ணன், பாமக சமூக நீதிப்பேரவை மாநிலத் துணைத் தலைவா் மூா்த்தி, பாமக மாவட்டச் செயலாளா் சிவானந்தம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் குமரேசன், பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அதிமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT