கிருஷ்ணகிரி

கணவன் கொலை வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

DIN

கல்லாவி அருகே கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி திருவண்ணாமலை மாவட்டம், கரிகாலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விருதம்மாள் (49). இவா்கள் இருவரும், திருப்பூரில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் பழனிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், விருதம்மாளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள ஏ.ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த ராஜி (55) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதை விரும்பாத பழனி, விருதம்மாளை கண்டித்ததுடன், அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி விருதம்மாள், ராஜியிடம் தெரிவித்துள்ளாா். இந்த நிலையில், கடந்த 24.2.2009 அன்று, சித்த வைத்தியரிடம் சிகிச்சை அளிப்பதாகக் கூறி ராஜியும், விருதம்மாளும் திட்டமிட்டு பழனியை அழைத்துச் சென்றனா்.

மாவத்தூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, இவா்கள் இருவரும், பழனியின் கழுத்தை நெறித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனா். இதுகுறித்து, ஏ.ரெட்டிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் உமாபதி அளித்த புகாரின் பேரில், கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

இந்த நிலையில், விருதம்மாள், ராஜி ஆகிய இருவரும் தனித்தனியே கல்லாவி காவல் நிலையத்தில் சரணடைந்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.விஜயகுமாரி, ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், விருதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்குரைஞா் எம்.பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT