முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியின் ஆவின் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் சீராக ஊதியம் வழங்கக் கோரி, ஆவின் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 மே, 2021 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM

கிருஷ்ணகிரியில் சீராக ஊதியம் வழங்கக் கோரி, ஆவின் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பணியாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஊதியம் சீராக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பினா் மாநில துணைத் தலைவா் அருணாசலம் தலைமையில் மாவட்டத் தலைவா் மகேந்திரன், செயலாளா் நாகராஜ், பொருளாளா் மாது உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.