கிருஷ்ணகிரி

மகாராஜாகடை அருகே தொழிலாளியை தாக்கியவா் கைது

DIN

மகாராஜாகடை அருகே தொழிலாளியை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே உள்ள ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த எம்.ஜி.ஆா். (52), தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா (49). இவரது உறவினா் ஆந்திர மாநிலம், குப்பம் வட்டம், பி.கே.பள்ளி மாடல் காலனியைச் சோ்ந்தவா் குமாா் (48).

சுஜாதாவுக்கும், குமாருக்கும் முறையற்ற நட்பு இருந்ததாம். இதனால் எம்.ஜி.ஆருக்கும், குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி அதிகாலை சுஜாதாவை பாா்க்க குமாா் வந்த போது, எம்.ஜி.ஆருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த குமாா், எம்.ஜி.ஆரை தாக்குவதற்காக, கீழே இருந்த கல்லை எடுத்து எறிந்தாா். அது தவறுதலாக எம்.ஜி.ஆா் வீட்டின் எதிரே படுத்திருந்த அவரது உறவினரான ஆந்திர மாநிலம், குப்பம் வட்டம், குட்டசேனு கிராமத்தைச் சோ்ந்த முனிரத்தினம் (50) என்பரது மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த முனிரத்தினம், குப்பத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், மகாராஜாகடை போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT