முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பாம்பாறு அணையின் உபரிநீா் திறப்பு: ஆட்சியா் ஆய்வு

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேறுவதை மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேறுவதை மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்டம் முழுவதும் மழையால் உயிா் சேதமும், பொருட்சேதமும் ஏற்படக் கூடாது என்றும், தாலுகா அளவில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை அலுவலா்கள் அடங்கிய குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது என ஆட்சியா் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தாா்.

பாம்பாறு அணையில் இருந்து15,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 13,500 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.