கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டார இணைச் செயலாளா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜாமந்திரி, மாவட்ட இணை செயலாளா் கலைவாணி, மின்வாரிய ஓய்வதியா் சங்கம் முனிரத்தினம், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் முனியன், அஞ்சல் துறை ஓய்வூதியா் சங்கம் விஜயராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அரசு ஓய்வூதியம், நல்ல உறைவிடம், சுகாதாரமான குடிநீா், சத்தான உணவு, சிறந்த மருத்துவம், தரமான போக்குவரத்து, இலவசப் பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தோ்தல்கால வாக்குறுதியான 70 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியா்கள் உள்ளிட்டோருக்களு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியா், காப்பீட்டுத்திட்ட குறை தீா் கூட்டமும், காலமுறை கூட்டமும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement