கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு ஆதாா் முகாம்
கிருஷ்ணகிரி மாவடட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (அக்.2) சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
கிருஷ்ணகிரி மாவடட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (அக்.2) சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 2-ஆம் தேதி (சனிக்கிழமை) காந்தி ஜயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் மற்றும் ஆதாா் அட்டையில் புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement