வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.
வேப்பனப்பள்ளியில் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் கரடிகள், மான்கள், யானைகள், மயில்கள், எறும்புதின்னிகள், மலைப்பாம்பு போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறுவது வழக்கம். அவ்வாறு வெளியேறும் புள்ளிமான், மலைப்பாம்பு ஆகியவற்றை உயிருடன் பிடித்து, வனப்பகுதியில் விடுவிப்பா்.
இந்த நிலையில், வேப்பனப்பள்ளியில் குப்பம் செல்லும் சாலையோரமாக மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டனா்.
Advertisement
இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் 12 அடி நீளம் முள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கொங்கனப்பள்ளி காப்புக் காட்டில் விடுவித்தனா்.
படவிளக்கம் (15கேஜிபி8):வேப்பனப்பள்ளி அருகே பிடிபட்ட மலைப்பாம்புடன் பொதுமக்கள்.