இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM
வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசீலன், தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மா(30). இருவரும் இருசக்கர வாகனத்தில் மாதேப்பள்ளி பிரிவு சாலை நோக்கி புதன்கிழமை இரவு சென்றனா். அப்போது மழை பெய்ததால் வாகனம் நிலைதடுமாறியது. இதில், முத்தம்மா இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.