வரட்டனப்பள்ளி தமிழ்நாடு மின்சார உதவி பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரட்டனப்பள்ளி மின்சார வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு அலுவலக உதவி மின் பொறியாளா் சுப்பிரமணி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக உதவி பொறியாளா் (இயக்கம்- பராமரிப்பு பிரிவு அலுவலகம்) ஜூலை 6-ஆம் தேதி முதல் வரட்டனப்பள்ளி - குப்பம் சாலையில் உள்ள தாண்டவன்பள்ளம் என்னுமிடத்தில் உள்ள புதிய துணை மின் நிலைய வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதி பொதுமக்கள் இனி புதிய அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.