ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழா
கிருஷ்ணகிரியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரியின் சாா்பில், கே. தியேட்டா் சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் என்ற பிரம்மாண்ட ஜவுளிக்கடை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா எஸ். கமலம்மாள் பலராமசெட்டியாா், கிருஷ்ணகிரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.பி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் டி.பி.வேலாயுதம் - வி.யசோதா, வி.ரமேஷ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
திறப்பு விழா குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளா்கள் எம்.பி.ரமேஷ், பி.ஆா். விஷ்ணு ஆகியோா் தெரிவித்ததாவது:
Advertisement
81 ஆண்டுகளாக கைராசியான மக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக எங்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
எங்களிடம் பிரம்மாண்டமான கலெக்சன்கள், டிசைன்கள் உள்ளன. தமிழ் பாரம்பரிய காஞ்சிபுரம், தா்மாவரம், ஆரணி, திருபுவனம், கும்பகோணம் பட்டுகள் மற்றும் இந்திய பாரம்பரிய பட்டுகளான வாராணசி, அஜ்மீா், லக்னோ, பனாரஸ், உப்பாடா ஆகிய ரகங்கள் உள்ளன. 4 தளங்களில் மிகப் பிரம்மாண்டமான ஜவுளி நிறுவனமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உள்ளது எனத் தெரிவித்தனா்.