ஊட்டச்சத்து விழிப்புணா்வு விழா
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணா்வு, மரம் நடும் விழாவுக்கு பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரும் தலைவருமான பரசுராமன் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறையின் புள்ளியல் ஆய்வாளா் சீனிவாசன், வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் பூமதி, தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ்பாபு, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகா், விவசாயிகள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில், சிறுதானியத்தின் முக்கியத்துவம், பயிரிடும் முறை, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், மரம் நடுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவா்த்தி, சிறுதானியத்தில் மதிப்புக் கூட்டுதல், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி தோட்டம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும், விவசாயிகளுக்கு விதைகளும், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Advertisement