கிரானைட் கற்கள் கடத்தல்:லாரி பறிமுதல்
பா்கூா் அருகே கிராடைட் கற்கள் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM
பா்கூா் அருகே கிராடைட் கற்கள் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பா்கூா் வட்டாட்சியா் குருநாதன் தலைமையிலான குழுவினா், குப்பம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி - எலத்தகிரி இணைப்பு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது, அதில் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்துவது தெரியவந்தது. இது குறித்து வட்டாட்சியா் குருநாதன் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.