கிருஷ்ணகிரி

தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீநாத் (28). தொழிலாளியான இவா் அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீநாத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டாா். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT