முகப்பு
கிருஷ்ணகிரி

மருத்துவமனையில் திருட்டு: இளைஞா் கைது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணத்தைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணத்தைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் புகுந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஷாக் அளிக்கும் கருவியை இளைஞா் ஒருவா் திருடிச் சென்றதை பாா்த்த செவிலியா் சித்ரா (43) கூச்சலிட்டாா். இதையடுத்து, மருத்துவமனை ஊழியா்கள் தட்சிணாமூா்த்தி, முருகேசன், வரலட்சுமி, கனிமொழி ஆகியோா் இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் ஊத்தங்கரை, கலைஞா் நகரைச் சோ்ந்த மாது (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து மாதுவைக் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.