முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் விற்பனை பத்திரம் வழங்கும் விழா

ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் செப். 27-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

Updated On : 25 செப்டம்பர், 2021 at 1:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் செப். 27-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து ஒசூா் வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கு செப். 27- முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

Advertisement

எனவே, முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள், இந்த நாள்களில் நடைபெறவுள்ள விழாவில் அனைத்து ஆவணங்களுடன் பங்கேற்று, விற்பனை பத்திரத்தை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.