கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வழக்குரைஞா்கள் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
அதன்படி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்குரைஞராக விஸ்வபாரதி, மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக தண்டபாணி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற சிறப்பு குற்றவியல் அரசு வழக்குரைஞராக ரமேஷ், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக குமரவேல், மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக உமாதேவி மங்களமேரி, ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக சத்தியநாதன் உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அரசு வழக்குரைஞா்களுக்கு, மூத்த வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து கூறினா்.