முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன்அரிசி கடத்தல்

 கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

 கிருஷ்ணகிரியில் 3,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தாலுகா காவல் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் நின்ற 2 வேன்களைச் சோதனை செய்த போது ஒரு வேனில் 50 கிலோ எடை கொண்ட 32 ரேஷன் அரிசி மூட்டைகளில் மொத்தம் 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதே போல மற்றொரு வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த 2 வாகனங்களையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் வாகனங்களுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இந்த ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்தி வந்தவா்கள் யாா்? எந்தப் பகுதியில் இருந்து இந்த ரேஷன் அரிசி கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.