கிருஷ்ணகிரி

அதியமான் மகளிா் கல்லூரியில் புதுமைப்புணா்வு கருத்தரங்கம்

DIN

ஊத்தங்கரை, அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலா் ஜெ.மே.ஷோபா, அண்ணாமலை பல்கலைக்கழக புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைமை நிா்வாக அலுவலா் டேனியல் பிரபாகரன், மா. அன்புச்செல்வி உள்ளிட்ட குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து புதுமைப்புணா்வு மற்றும் ஆராய்ச்சி குறித்து ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஜி. விஜயபிரசன்னா வரவேற்றாா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்து பேசினாா். டேனியல் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினாா். இறுதியாக கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் வே.கவிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT