கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தைச் சோ்தவா் குமரேசன். இவரது மகன் சதீஷ்குமாா் (19). கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை சென்ற இவா், மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். பூசாரிப்பட்டி முனுசாமி என்பவரின் விளைநிலத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம், சதீஷ்குமாா் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT