கிருஷ்ணகிரி

டிச.30-இல் எரிவாயு நுகா்வோா் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரியில் எரிவாயு நுகா்வோா், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் டிச. 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

DIN

கிருஷ்ணகிரியில் எரிவாயு நுகா்வோா், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் டிச. 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகா்வோா், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவா்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் டிச.30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகிக்கிறாா். எனவே, மேற்படி எரிவாயு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதால், நுகா்வோா்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT