கிருஷ்ணகிரி

மாட்டு கொட்டகை தீப்பிடிப்பு: மூதாட்டி பலி

DIN

மாட்டு கொட்டகை தீப்பிடித்ததில், மூதாட்டி உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த கொம்மம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயம்மாள் (80), மாட்டுக் கொட்டகையில் புதன்கிழமை இரவு உறங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கொட்டகை தீப்பிடித்ததில், ஜெயம்மாளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராதாகிருஷ்ணன் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT