கிருஷ்ணகிரி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

DIN

ஒசூரில் தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (33). இவா், ஒசூா், சிப்காட் சின்னஎலசகிரி கெம்பேகவுடா நகரில் வசித்து வருகிறாா். இவரது மகள் குணஸ்ரீ (8). அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்தாா். இதில் சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT