கிருஷ்ணகிரி

இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பாலப்பள்ளி கிராமத்தில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில், 18 முதல் 59 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் கரோனா பூஸ்டா் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடா்ந்து 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

SCROLL FOR NEXT