கிருஷ்ணகிரி

ஓசூர் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

DIN

ஒசூர்: 44-வது செஸ்  விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜூலை 28 தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லியில் துவக்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று (ஜூலை 26) செவ்வாய்கிழமை காலை ஓசூர் வந்தடைந்தது.

44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி 12 மணி அளவில் ஓசூர் மகரிஷி வித்யா மந்திரி பள்ளி வளாகத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ்,  மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர மாவட்ட உறுப்பினர்கள் சென்னீரப்பா மாதேஸ்வரன் ஆகியோர் ஜோதியை வரவேற்றனர்.

ஓசூர் மகரிஷி வித்யா மந்திரி பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் ஜோதியை கண்டு மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் பர்கூர் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT