கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, கைப்பேசி திருட்டு

DIN

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை, கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியைச் சோ்ந்தவா் ஆஷா என்கிற அகிலா (32). இவா் கடந்த 14-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள், அகிலாவின் கவனத்தை திசை திருப்பி, அவா் வைத்திருந்த கைப்பையை பறித்துச் சென்றனா். அந்த கைப்பையில் 6 பவுன் தங்க நகைகள், கைப்பேசி இருந்தது. இதுகுறித்து அகிலா அளித்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT