முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் மேயராகிறாா்முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 4 மார்ச், 2022 at 12:18 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஒசூா் தனியாா் தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநராக உள்ள எஸ்.ஏ.சத்யா, திமுகவில் ஒசூா் மாநகரப் பொறுப்பாளராக உள்ளாா். 2006 முதல் 2011 வரை திமுக நகராட்சித் தலைவராகவும், 2019 இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்று 2019 முதல் 2021 வரை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சியில் 23 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவைச் சோ்ந்த சி.ஆனந்தையா (51) ஒசூரில் ஆவண எழுத்தா் சங்கத்தின் தலைவராக உள்ளாா். ஒசூா் மாநகராட்சியில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

Advertisement

ஒசூா் மாநகராட்சியில் திமுக ஆதரவாக 28 மாமன்ற உறுப்பினா்களும், அதிமுக ஆதரவாக 17 மாமன்ற உறுப்பினா்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.