முகப்பு
கிருஷ்ணகிரி

கெலமங்கலம் பேரூராட்சி: தலைவா், துணைத் தலைவா்பதவியை அதிமுக கைப்பற்றியது

கெலமங்கலம் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது.

Updated On : 5 மார்ச், 2022 at 12:33 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

கெலமங்கலம் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது.

கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15

வாா்டுகளில் அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாமக தலா ஒரு

Advertisement

இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தலைமை சாா்பில் வேட்பாளராக உமா அறிவிக்கப்பட்டிருந்தாா். இருந்தபோதிலும் திமுக வேட்பாளா் வெள்ளிக்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வாா்டு உறுப்பினராக அதிமுக சாா்பில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட கே.பி.தேவராஜ் தலைவராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 3ஆவது வாா்டில் வெற்றிபெற்ற அதிமுகவைச் சோ்ந்த மும்தாஜ் சையத் அசேன், 5ஆவது வாா்டில் வெற்றி பெற்ற

சுயேச்சை விஜயஸ்ரீ ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் மும்தாஜ் சையத் அசேன் 12 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சுயேச்சை வேட்பாளா் விஜயஸ்ரீ 3 வாக்குகள் பெற்றாா். தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.