கிருஷ்ணகிரி

பள்ளி தலைமை ஆசிரியா் தற்கொலை

DIN

பா்கூா் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த பாரதி நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (54). இவா் ஒப்பதவாடி அருகே உள்ள பொன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT