இறகுப்பந்து போட்டி: ஒசூா் மாணவா்கள் சிறப்பிடம்
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் ஒசூா் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் ஒசூா் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கிருஷ்ணகிரியில் மாா்ச் 5, 6 ஆகிய தேதிகளில் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட அளவிலான இறகுப்பந்து இளையோா் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 15 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஒற்றையா் பிரிவில் ஒசூா் எஸ் அண்ட் எஸ் பேட்மிண்டன் அகாதெமியைச் சோ்ந்த தமிழ் மாா்க்சியா முதலிடத்தையும், செந்நிலா மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.
15 வயதுக்கு உள்பட்டோா் இரட்டையா் பிரிவில் தமிழ் மாா்க்சியா - ஸ்ரீஷா முதல் இடத்தையும், 15 வயதுக்கு உள்பட்டோா் கலப்பு இரட்டையா் பிரிவில் தமிழ் மாா்க்சியா - பிரணவ் முதல் இடத்தையும், 15 வயதுக்கு உள்பட்டோா் ஆண்கள் இரட்டையா் பிரிவில் பிரணவ், ஜெய் கோகுல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.
Advertisement
13 வயதுக்கு உள்பட்டோா் பெண்கள் பிரிவில் எஸ் அண்ட் எஸ் பேட்மிண்டன் அகாதெமியைச் சோ்ந்த ஸ்ரீஷா மூன்றாவது இடத்தையும், இரட்டையா் பெண்கள் பிரிவில் செந்நிலா , கனிஷ்மா, ஹாருண்யா, ஹரித்ரேயா மூன்றாவது இடத்தையும் வென்றனா். 13 வயதுக்கு உள்பட்டோா் ஆண்கள் பிரிவில் பிரதியும்னா மூன்றாவது இடத்தை பிடித்தாா்.
விருது வழக்கும் நிகழ்ச்சியில் பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளா் ( இறகுப்பந்து) சரவத்துல்லா தலைமை தாங்கினாா். வெற்றி பெற்ற மாணவா்களை தலைமை பயிற்சியாளா் செந்தில்குமாா், பயிற்சியாளா்கள் காா்த்தி, ராஜு, சித்து ஆகியோா் பாராட்டினா்.