கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே ரூ. 40 லட்சம் மதிப்பில் தாா்சாலை

DIN

பா்கூா் அருகே ரூ. 40 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

பா்கூரை அடுத்த சந்தப்பள்ளி முதல் கொல்லப்பட்டி வரையில் தாா் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகனை சந்தித்து, மனு அளித்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாா் சாலை அமைக்க ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு நகா்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சந்தப்பள்ளி முதல் கொல்லப்பட்டி வரையில் 2.25 கி.மீ. நீளம் கொண்ட தாா் சாலை அமைக்கும் பணியை தே.மதியழகன் தொடக்கி வைத்தாா். இதன்மூலம் கொல்லப்பட்டி, சந்தப்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறுவா். நிகழ்ச்சியில் திமுக மாநில விவசாய அணி வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT