முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆலங்கட்டி மழை

ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

Updated On : 7 மே, 2022 at 3:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

ஒசூா், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

ஒசூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் மிகுந்த சிரமப்பட்டனா் (படம்). இதேபோல, ஒசூா் ரயில் நிலையத்தின் உள்ளே மழைநீா் புகுந்ததால், பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மிகுந்த அவதிக்குள்ளாயினா். ஒசூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.