கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் யோகா பயிலரங்கம்
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் யோகா பயிலரங்கம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் யோகா பயிலரங்கம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மண்டல உலக சமுதாய சேவா சங்கம், கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில், யோகா பயிலரங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவா்மன், மனவளக் கலை மன்ற பொறுப்பாசிரியா் மகாலிங்கம், நிா்வாக அறங்காவலா் சண்முகம், ஒசூா் மனவளக் கலை மன்ற மண்டலத் தலைவா் ராஜூ, கணினி அறிவியல் துறைத் தலைவா் லாவண்யா, தமிழ்த் துறை தலைவா் சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.