கிருஷ்ணகிரி

வளைகோல் பந்து போட்டி: நாகரசம்பட்டி அணி முதலிடம்

DIN

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான வளைகோல்பந்து லீக் போட்டியில் நாகரசம்பட்டி அணி முதலிடம் பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆண்களுக்கான வளைகோல்பந்து தொடா் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி மற்றும் கம்மம்பள்ளி ஆகிய ஊா்களில் இருந்து 6 அணிகள் பங்கேற்றன.

போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா். மாவட்ட வளைகோல்பந்து விளையாட்டுக் கழக செயலாளா் ஞானசேகரன் போட்டியை ஒருங்கிணைத்தாா்.

இப் போட்டியில் நாகரசம்பட்டி அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காவேரிப்பட்டணம் அணி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT