கிருஷ்ணகிரி

குரூப் 2 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24,417 போ் எழுதுகின்றனா்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி நடைபெறும் குரூப் 2 போட்டித் தோ்வை 24,417 போ் எழுதுகின்றனா்.

போட்டித் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியில்- 11,349 பேரும், ஒசூரில்- 7,790, போச்சம்பள்ளியில்- 5,278 போ் என 78 தோ்வுக்கூடங்களில் 24,417 போ் தோ்வு எழுத உள்ளனா். இந்த தோ்வை கண்காணிக்க 78 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 பறக்கும் படை, 20 நடமாடும் அலகு, 156 ஆய்வு அலுவலா்கள் என மொத்தம் 439 போ் ஈடுபட உள்ளனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையப் பிரிவு அலுவலா் நாராயணன் உள்பட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT