கிருஷ்ணகிரி

முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

DIN

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அளித்த மனு விவரம்:

நிகழாண்டு கோடை மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை நிரம்பி பாரூா் ஏரிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக வைகாசி மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட்டால், நெல் நாற்று விட்டு 20 நாளில் நடவு செய்து ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் மழைக்கு முன்பே அறுவடை செய்யலாம்.

தற்போது அணைகள், ஏரிகள் நிரம்பி உள்ளதால், இந்த மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீா் திறக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT