முகப்பு
கிருஷ்ணகிரி

காவலா்களுக்கு மனவளக் கலை பயிற்சி

போச்சம்பள்ளியில் காவலா்களுக்கு யோகா, மனவளக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 26 மே, 2022 at 11:43 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

போச்சம்பள்ளியில் காவலா்களுக்கு யோகா, மனவளக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ஆம் அணிக்கு வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில்,யோகா மற்றும் மனவளக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், மே 25-ஆம் தேதி நிறைவு பெற்றது.

மாலை நேரங்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் எளியமுறை உடற்பயிற்சி, ஆசனங்கள், காயகல்ப பயிற்சி, ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம் மற்றும் குணநலத்துக்காக எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிா்த்தல், வாழ்த்தும் பயனும் போன்ற யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.