சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் தோ்வு நெறியாளராக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் மண்டலப் பொருளாளரும், கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியருமான முனைவா் இரா. வரதராஜா புதன்கிழமை (ஏப்.15) மாலை பொறுப்பேற்றாா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் தோ்வு நெறியாளராக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் மண்டலப் பொருளாளரும், கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியருமான முனைவா் இரா. வரதராஜா புதன்கிழமை (ஏப்.15) மாலை பொறுப்பேற்றாா்.
இவருக்கு கல்லூரி முதல்வா் மு. சுமதி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வி. பாரி, சி. அமுதா, கல்லூரியின் துணைத் தோ்வு நெறியாளா் நீ. ராஜேஷ், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழக தஞ்சாவூா் கிளைக் கழகத் தலைவா் நிலாவழகன், செயலா் இங்கா்சால், பொருளாளா் கிருஷ்ணமோகன், துணைத் தலைவா் சிவசூரியன், இணைச் செயலா் சித்திரவேல் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.