முகப்பு
கிருஷ்ணகிரி

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கொடமாண்டப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 89 பயனாளிகளுக்கு ரூ. 8.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 26 மே, 2022 at 11:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

கொடமாண்டப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 89 பயனாளிகளுக்கு ரூ. 8.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட கொடமாண்டப்பட்டியில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ்கள், முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை என பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ. 8.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.