கிருஷ்ணகிரி

முதியவரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்ய முயன்றவா் கைது

DIN

சூளகிரி அருகே முதியவரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்ய முயற்சித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி, கீழ்தெருவை சோ்ந்தவா் சிவசங்கா் (வயது 70). விவசாயி. இவா் புதன்கிழமை பேரிகை சாலையில் உள்ள பேக்கரி அருகே நடந்து சென்றாா். அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த 2 போ் சிவசங்கரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ. 500 மற்றும் அவரது கைகடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.

அவா்களை தடுக்க முயன்ற சிவசங்கரின் கைகளைக் கடித்தனா். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடி வந்தனா். அவா்களை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்டவா்களில் ஒருவா் தப்பியோடிவிட்டாா். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் சூளகிரி, முஸ்லிம் தெருவைச் சோ்ந்த எல்க்ட்ரீசியன் மகபூப் பாஷா (21) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அதே பகுதியைச் சோ்ந்த முனீா் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT