மக்கள் நலத் திட்டங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சூளகிரி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த பிறகு இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவா்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு சிகிச்சைகள், அதற்கான பிரிவுகளை பாா்வையிட்டு, மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.
அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசின் முன்னோடித் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், மானிய உதவிகள் குறித்து அரசு அலுவலா்கள், வங்கியாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு செய்தியாளா்களிம் பேசிய பீலா ராஜேஷ், ‘அரசின் பல்வேறு திட்டப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
Advertisement
மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வந்தனா காா்க், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஈஸ்வரன், ஒசூா் சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் ஆய்வின் போது உடனிருந்தனா்.