கிருஷ்ணகிரி

உரிமமின்றி கிரானைட் கல் பாரம்ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

DIN

உரிமமின்றி கிரானைட் கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி, கனிமவள பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி தலைமையிலான குழுவினா் அச்சமங்கலம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் 35 டன் எடை கொண்ட ஒரு ராட்சத கிரானைட் கல், ஏற்றப்பட்டு கடத்திச் செல்ல முயற்சிப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அரசு அலுவலா் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியுடன் கிரானைட் கல்லைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT