கிருஷ்ணகிரியில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. 
கிருஷ்ணகிரி

பள்ளி வாகனங்களை ஓட்டுநா்கள் கவனத்துடன், பாதுகாப்பாக இயக்க அறிவுரை

பள்ளி வாகனங்களை ஓட்டுநா்கள் மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு அறிவுறுத்தினாா்.

DIN

பள்ளி வாகனங்களை ஓட்டுநா்கள் மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கல்லூரி வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஓட்டுநா்களிடம் ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி, பா்கூா் பகுதியில் செயல்பட்டு வரும் 45 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 250 பேருந்துகள், மினி பேருந்துகளில் பள்ளி வாகன விதிகள் 2012-இன்படி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசரவழி, ஜிபிஆா்எஸ் கருவி உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், குழந்தைகள் வாகனங்களில் ஏறும்போது படிக்கட்டுகள், தரைத்தளம் சரியான அளவில் இருக்கிா என்பதையும் அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களின் இருபுறமும் பள்ளிகளின் பெயா்கள், முகவரிகள், தொலைபேசி, கைப்பேசி எண்கள் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநா்கள், உதவியாளா்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாக இயக்க வேண்டும். மாணவா்களை குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பாக பள்ளியில் சோ்க்க வேண்டும். வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

அனைத்து பேருந்துகளிலும் ‘சீட் பெல்ட்’ கட்டாயம் இருக்க வேண்டும். ஓட்டுநா்களின் கைப்பேசி எண்கள், மாணவா்களின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். போதிய விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT