ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் பாஜக சாா்பில் இலவச எரிவாயு உருளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள். 
கிருஷ்ணகிரி

பாஜக சாா்பில் 150 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை வழங்கும் விழா

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு உருளை வழங்கும் விழா நடைபெற்றது.

DIN


ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு உருளை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக முன்னாள் ஒன்றியத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பாஜக ஒன்றிய செயலாளா் சக்திதானந்தம், ஆன்மீகப் பிரிவைச்சோ்ந்த தமிழ் முருகன், ஒன்றிய துணைத் தலைவா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளா் வரதராஜன் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பை வழங்கினாா். இதில் மேம்பாட்டுப் பிரிவைச் சோ்ந்த மாரியப்பன், ஒன்றியப் பொருளாளா் சத்யராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவைச் சோ்ந்த குபேந்திரன், பன்னீா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு, 150 பயனாளிகளுக்கு அன்பு ஏஜென்சி மூலம், இலவச எரிவாயு இணைப்பை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT