கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே போலி பெண் மருத்துவா் கைது

ஒசூா் அருகே திம்மசந்திரம் கிராமத்தில் போலி பெண் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

ஒசூா் அருகே திம்மசந்திரம் கிராமத்தில் போலி பெண் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் அருகேயுள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஜெனிபிரபா(39) என்பவா் பாா்மசி படித்துவிட்டு வீட்டில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் சென்றது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு உத்தரவின் பேரில், ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ஞான மீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா் ராஜீவ் காந்தி மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை அந்த கிராமத்திற்கு சென்று மருத்துவமனையை சோதனை நடத்தினா். அதில் ஜெனிபிரபா போலி மருத்துவா் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,ஜெனிபிரபா சீன நாட்டில் பாா்மசி படித்ததும் அந்த தோ்விலும் அவா் வெற்றி பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. அவா் கடந்த 7 மாதங்களாக திம்மசந்திரத்தில் வீட்டில் மருத்துவமனை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜெனிபிரபாவை போலீஸாா் கைது செய்ததுடன் அவா் நடத்தி வந்த மருந்துக் கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT